Friday 9 December 2016

பயணம் - இராமேஸ்வரம் & தனுஷ்கோடி 3

இராமேஸ்வரம் வரை வந்த யாரும் கண்டிப்பாக சென்று வர வேண்டிய இடம் தனுஷ்கோடி.. அதற்கு முக்கியமான தேவை 4 wheel drive வசதி கொண்ட வாகனம்... ஏனென்றால் தனுஷ்கோடி முழுவதும் கடல் மணல்  தான்...ஒரு குறிப்பிட்ட தூரத்துக்கப்புறம் சாலை வசதி கிடையாது... நாம் பெரும்பாலும் உபயோகிப்பது 2 wheel drive வாகனங்களே... அதனாலென்ன வாடகைக்கு எடுத்து கொள்ளும் வசதி உள்ளது... அதிலும் 2 வகை உள்ளது... ஒன்று ஜீப்.. நமக்குன்னு பிரைவேட்டா ஒரு ஜீப்பை வாடகைக்கு(டிரைவரோட தான்) எடுத்துக்கலாம்... நம்ம சொல்ற இடத்துல இருந்து பிக்கப் பண்ணிட்டு தனுஷ்கோடியை சுத்தி காமிச்சுட்டு கொண்டு வந்து விட்ருவாங்க... இன்னொன்னு மஹிந்திரா வேன்...நம்ம ஊர் ஷேர் ஆட்டோ மாதிரி தான்... ஏறுங்க ஏறுங்கனு ஏத்தி அடைச்சுட்டு போவாங்க.. ஆனா டிக்கெட் விலை கொஞ்சம் சௌரியமா இருக்கலாம்... நாங்களே 6 பேர் இருந்ததால ஒரு ஜீப் வாடகைக்கு எடுத்துக்கிட்டு கிளம்பினோம்... ஒருவிதத்துல ஜீப் தான் வசதியும் கூட...

நாங்க முதல்ல போன இடம் கோதண்டராமஸ்வாமி கோவில்... தனுஷ்கோடி போற வழில ஒரு லெப்ட்டு எடுத்து போனா தீவுக்குள்ள ஒரு தீவு மாதிரி இந்த கோவில் இருக்கு... கொஞ்சம் வடநாட்டு பாணில இருக்குனு கூட சொல்லலாம்... 1000 வருசத்துக்கு மேல பழமையானதுன்னு சொல்றாங்க... ரொம்ப பிரமாதமான இடமனெல்லாம் சொல்ல முடியாது... நேரம் இருந்தா ஒரு தடவை போயிடு வாங்க..



தனுஷ்கோடியை நோக்கி பயணிக்க ஆரம்பித்தோம்..கீழே உள்ள படத்தில் உள்ள மாதிரி தான்... சாலை, சாலையின் ரெண்டு புறத்திலும் முட்ச்செடிகள்... அதற்கு பின் இரண்டு புறமும் கடல் தான்... கூகிள் மேப்ல பாத்தீங்கன்னாலே தெரியும் உங்களுக்கு.. இதே மாதிரி நிலப்பரப்பு ஒரு வெளிநாட்டில் இருந்திருந்தால் அதை அப்படி அழகுபடுத்தி வைத்திருப்பார்கள்... இதேமாதிரி ஒரு இடத்தை ஆஸ்திரேலியாவில் பார்த்திருக்கிறேன்..அவ்வளவு அருமையாக பராமரிக்கிறார்கள்... வரலாறே இல்லாதவர்களெல்லாம் அவர்கள் வரலாற்றில் அவ்வளவு ஆர்வம் காமிக்கிறார்கள்... நாமோ புறக்கணிக்கிறோம்... சரி இந்த புலம்பலை விட்டுட்டு தொடர்வோமே...



இந்த இடத்துல தான் எங்க ஜீப் டிரைவர் வேண்டிய விட்டு இறங்கி வண்டிக்கடில ஏதோ வேலை பண்ணினார்... என்னனு கேட்டேன்... இதுவரைக்கும் 2 wheel drive mode ல இருந்ததை 4 wheel mode க்கு மாத்தினாராம்.. அதிலிருந்தே ஆர்வம் தாங்க முடியவில்லை... ரோட்டிலிருந்து உள்ளே திரும்பியதும் நாங்கள் பார்த்த காட்சி இது தான்... வெள்ளை வெளேரென்ற மணல் பரப்பும் அதற்கு மேலே நீலவானமும் தான்...


இது தான் நான் முன்னமே சொன்ன வேன்... இந்த மாதிரி வாகனங்கள் போன தடத்துலயே தான் மற்ற வாகனங்களும் போகின்றன...


அங்கங்கே இந்த மாதிரி நீர்த்திட்டுகளும் கொக்குகளும்...


இது தான் தனுஷ்கோடியில் செயல்பட்ட ரயில் நிலையத்தின் மிச்சம்...


இது அங்கே இருந்த சர்ச்சின் மிஞ்சிய சுவர்கள்.. இந்த சுவர்களும் சமீபத்தில் விழுந்து விட்டதாக கேள்வி பட்டேன்...


வழி நெடுக இந்த மாதிரி உடைந்த படகுகளை பார்க்கலாம்... ஒருவிதத்தில் இவையெல்லாம் நடந்து முடிந்த ஒரு சோகத்தின் சின்னங்களாக இருந்தாலும் புகைப்பட கலையில் ஆர்வம் உள்ளவர்களுக்கு நல்ல தீனி தான் .... இந்த படத்தில் தெரியும் டவர் நமது தொலைத்தொடர்பு துறையால் அமைக்கப்பட்டுள்ளது... இங்கிருந்து இலங்கை வெறும் 21கிமீ தானாதலால் இந்த டவர் மேலிருந்து பார்த்தல் கூட தெரியலாம்..


கீழே இருப்பது தான் நாங்கள் வந்த ஜீப்... தனுஷ்கோடியின் ஒரு கோடியில் வங்காள விரிகுடாவும் இந்துமாக்கடலும் சந்திக்கும் முனையில் இறங்கி நடக்க ஆரம்பித்தோம்...


ஒருபுறம் அலைகளே இல்லாத வங்க கடல்... மறுபுறம் ஆர்ப்பரிக்கும் இந்திய பெருங்கடல்... இவற்றின் சங்கமம்... பிரமிப்பான காட்சி என்று தான் செல்வேன்... stunning moment.... அலையே இல்லாமல் ஒரு கடல் இருக்க முடியுமா என்பதை நேரில் பார்த்தால் மட்டுமே நம்ப முடியும்... சுண்டல் விக்கிறவுங்க முறுக்கு விக்குறவுங்க தொந்தரவு இல்லாம பெருசா கூட்டமும் இல்லாம எல்லையில்லாமல் விரிந்து கிடைக்கும் கடலை ரசிப்பதே தனி சுகம் தான்...


அதே மாதிரி கடலுக்குள் அங்கங்கே சில மணல் திட்டுக்களையும் காணலாம்.. அதில் நாலாவது திட்டு வரை இந்திய எல்லைனு நினைக்குறேன்... மற்றபடி காற்று கொஞ்சம் பலமாக வீசினால் மணலை தரையோடு அடித்துக்கொண்டு வருவதையும் பார்க்கலாம்... கீழே உள்ள வீடியோவில் இதையும் கடல் மணல், நீரின் நிறமாற்றங்களையும் பார்க்கலாம்...





இன்னொரு முக்கியமான விஷயம் சில மாதங்களில் இந்த கடல் உள்வாங்கவும் செய்கிறதாம்.. அதாவது அப்படி உள்வாங்கும் போது இப்போது தெரியும் மணல் பரப்பில் பாதி கூட பார்க்க முடியாதாம்... டிரைவர் சொன்னது சரியாக நியாபகம் இல்லை... கிட்டத்தட்ட 6 மாதங்கள் கடலின் அளவு ஒரு மாதிரியும் மீதி உள்ள 6 மாதங்களில் வேறு அளவிலும் இருக்குமாம்... நான் சென்றது October மாதம்...அப்போது கடல் உள்வாங்காத சமயம்.. இதெல்லாம் தெரியாமல் தான் அங்கு சென்றேன்.. ஒருவிதத்தில் அதிர்ஷ்டம்னு தான் சொல்லணும்... இதை மாதிரி எத்தனையோ விஷயங்கள் இருக்கின்றன...

நம்மில் பெரும்பாலோரை பொருத்தவரை தனுஷ்கோடி என்பது 1964 புயலில் அழிந்து நமது அரசால் வாழத்தகுதியில்லாததாக அறிவிக்கப்பட்ட ஒரு இடம் அவ்வளவு தான். ஆனால் நாம் ஒவ்வொருவரும் வாழ்க்கையில் ஒரு முறையாவது சென்று வரவேண்டிய இடம்... ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவிதமான  அனுபவத்தை தரலாம்.. 
அது தான் தனுஷ்கோடி!!!

Thursday 8 December 2016

பயணம் - இராமேஸ்வரம் & தனுஷ்கோடி 2

பாம்பன் பாலத்திலிருந்து 20 நிமிட பயணத்தில் இராமேஸ்வரம் உங்களை வரவேற்க தயாராயிருக்கும்!!! ஊருக்குள் நுழைந்ததுமே ஒரு முக்கியமான மாற்றத்தை நீங்கள் உணர முடியும்.. எங்கு பார்த்தாலும் வெளேரென்ற கடல் மணல் தான் சாலையோரத்தில் தெரிகிறது.. எப்படி தான் இந்த ஊர் உருவானதோ... எப்படி இவ்வளவு பெரிய கோவிலை கட்டினங்களோனு நினைத்து பார்த்தால் ஆச்சரியமாக தான் இருக்கிறது... இந்த கோவில் கட்டுவதற்காக திருநெல்வேலி பக்கத்திலிருந்தும் இலங்கையின் திரிகோணமலையிலிருந்தும் கற்கள் கொண்டு வந்து கட்டினார்கள் என்றால் நிஜமாகவே பிரம்மாண்டமான சாதனை தான்...


கோவிலை நெருங்க நெருங்க சாலையும் நெருக்கமாக இருக்கிறது.. அதனால் இந்த ஊருக்குள் கார் ஓட்டுவதும் பார்க் செய்வதும் கொஞ்சம் சிரமம் தான்.. அதனால் முடிந்த அளவுக்கு கார் தேவைப்படாத மாதிரி பிளான் செய்து கொள்ளவும்... அதற்கு முக்கியமாக செய்ய வேண்டியது கோவிலுக்கு அருகில் தாங்கும் இடத்தை தேர்ந்தெடுப்பது... முக்கியமான புனிதத்தலம்/சுற்றுலாத்தமாதலால் தங்குவதற்கு நிறைய options இருக்கு... பெரும்பாலான இடங்களுக்கு இணையத்தில் rating  & reviews  இருப்பதால் நமக்கு பொருத்தமான ஒன்றை தேர்ந்தெடுத்து கொள்ளலாம்.. நான் தங்கியது ஹோட்டல் பிருந்தாவன் ரெசிடெண்சி.. இவர்கள் இணையத்தில் கொடுத்திருக்கும் விலையை விட குறைந்த விலைக்கு தருகிறார்கள்.. முதலிலேயே போனில் பேசி ரூம் வாடகையை fix பண்ணிரலாம்.. இந்த பயணத்தை பொறுத்தவரை எனக்கு laxury முக்கியமில்லை.. அதனால் பேமிலி ரூம் ac வசதியுடன் நன்றாக இருந்தது... பாத்ரூம் மற்றும் படுக்கை வசதிகள் அனைத்தும் மிக சுத்தமாக இருந்தது...ஹோட்டல் முன்னாடியே கார் பார்க் பண்ணி கொள்ளலாம்.. குறைன்னு சொல்லனும்னா இந்த ஹோட்டலில் ரெஸ்டாரண்ட் வசதி இல்லை... ஆனால் ரிசப்ஷனில் ஆர்டர் செய்தால் அவர்களே ஒரு நல்ல மெஸ்ஸிலிருந்து வாங்கி வந்து தருகிறார்கள்.. நாங்கள் போய் சேர்ந்தது மதிய நேரமாதலால் மீல்ஸ் வாங்கி சாப்பிட்டோம்... நல்ல சுவை.. கண்டிப்பாக வயிற்றுக்கு ஒன்றும் பிரச்சனை இல்லை..😃😃

ஹோட்டலின் இணைய முகவரி: http://www.hotelbrindavanresidency.com/




மேலே உள்ள படத்தை பார்த்தாலே தெரியும், ஹோட்டலில் இருந்து கோவில் எளிதாக நடக்க கூடிய தூரம் தான்.. அதே மாதிரி அக்னி தீர்த்தமும் கடல் புறமும் கூட மிக அருகில் தான்... பொதுவாக ராமேஸ்வரத்தில் சாப்பாடு பிரச்சனை இல்லையென்று தான் சொல்ல வேண்டும்.. பிராண்ட் ஹோட்டல் இல்லையென்றாலும் டீசெண்டான ஹோட்டல் நிறையவே இருக்கிறது... எனக்கு தெரிந்து ஒரே பிராண்டட் ஹோட்டல் TTDC தான்... இதையும் மேலே உள்ள மேப்பில் பார்த்துக்கொள்ளலாம்... இங்கு சாப்பிட்ட அனுபவத்தை பிறகு சொல்கிறேன்... மதிய உணவுக்கு பிறகு சிறிது ஓய்வெடுத்துவிட்டு தனுஷ்கோடி சென்றோம்.. அதை பற்றி அடுத்த பதிவில் சொல்கிறேன்..
Non-Linear ?!!!!

எல்லாரும் ராமேஸ்வரத்திலுள்ள தீர்த்தங்கள் பற்றி கேள்வி பட்டிருப்பேர்கள்.. 64 தீர்த்தங்கள் உள்ளனவாம்.. அவற்றில் முக்கியமான 22 தீர்த்தங்கள் கோவிலுக்கு உள்ளே இருக்கின்றன.. இந்த தீர்த்தங்களை பற்றி பல கருத்துக்கள் உள்ளன.. எல்லா தீர்த்த கிணறுகளும் பக்கத்துல பக்கத்துல தான் இருக்கும்.. 2 அடி தூரத்துக்குள்ள தான்.. ஆனா ஒவ்வொரு தீர்த்தத்துலயும் தண்ணீர் சுவை வேற மாதிரி இருக்கும்னு சொல்றாங்க.. எனக்கு என் மனைவி சமையல்லயும் வித்தியாசம் கண்டு பிடிக்க தெரியாது... இங்கயும் தெரியல... ஆனா தண்ணீர் சுவை அருமை... இந்த தீர்த்தங்கள்ல குளிச்சு முடிச்சதுக்கப்புறம் தான் நம்ம பூர்வ ஜென்மத்துல புண்ணியம் பண்ணி இருந்தோம்னா அதோட பலன்களெல்லாம் நமக்கு வர ஆரம்பிக்கும்னு இன்னொரு நண்பர் சொன்னார்... எது எப்படியோ இது கண்டிப்பாக ஒரு இனிய அனுபவமே.. காலையிலேயே ரூம்ல குளிச்சுட்டு தான் இந்த கோவிலுக்கு வந்தோம்.. முதல்ல அக்னி தீர்த்தத்துல குளிச்சுட்டு தான் மத்த தீர்த்தத்துல குளிக்க போனும்னு சொன்னாங்க... அக்னி தீர்த்தம்குறது கடலோட கரையில ஒரு இடம் தான்... அந்த இடத்தை பொய் பார்த்தீங்கன்னா அது கடல்னு நம்பவே மாட்டிங்க.. ஒரு ஏரிக்கரை மாதிரி தான் இருக்கும்... அலைகளே கிடையாது... அதே மாதிரி இன்னொரு அதிர்ச்சியான விஷயம், சுத்தம்கிறது மருந்துக்கு கூட கிடையாது... சில சிறப்பு பூஜை செய்யுறவுங்க அப்படியே அவுங்களோட உடை மற்றும் சில பூஜை பொருட்களையெல்லாம் அங்கேயே விட்டுட்டு வரணும்ங்கிறது ஐதீகமாம்... மற்றதை நீங்களே கற்பனை செய்து கொள்ளுங்கள்... நான் பெரியவர்களுடன் போனதால் பெரிதாக மறுத்து பேச விரும்பவில்லை.. அதனால் கையில 2 சொட்டு தண்ணி எடுத்து தலையில தொளிச்சுட்டு வெளில வந்துட்டேன்.. அதுக்கப்புறம் தான் கோவிலுக்குள்ளே போனோம்.. கோவிலுக்குள்ள உள்ள தீர்த்தங்கள்ல குளிக்குறதுக்கு பணம் கட்டி அனுமதி சீட்டு வாங்கி உள்ள போகவேண்டியதுதான். நாங்க தெரிஞ்ச ஒருத்தர் மூலமா போனதால எங்க கூடயே ஒருத்தர் வந்து இந்த தீர்த்தங்களுக்கெல்லாம் வரிசைப்படி அழைத்து சென்றார். தீர்த்தம்கிறது ஒரு கிணறு தான்.. நம்ம போக போக அந்த கிணத்துல இருந்து ஒரு வாளில தண்ணி எடுத்து ஊத்துவாங்க.. அவ்வளவு தான்.. நான் அக்டோபர் மாசம் போயிருந்ததுனால தண்ணி ஜில்லுனு இருந்துச்சு... ஒரு சில தீர்த்தங்கள்ல தண்ணி இல்லாததால அதெல்லாம் skip பண்ணிட்டு போனோம்... மொத்தத்துல இது ஒரு மறக்க முடியாத அனுபவம் தான்.. இந்த ஈரத்தோட சாமி கும்பிட போக கூடாதுங்கறதுனால மறுபடியும் ரூமுக்கு போய் டிரஸ் மாத்திட்டு போலாம்னு கிளம்பினோம்.. டிரஸ் மாத்தி ரெடி ஆகுறதுக்கும் பசி எடுக்கறதுக்கும் சரியா இருந்துச்சு...

நாங்க தங்கி இருந்த ஹோட்டல்ல விசாரிச்சப்ப TTDC பத்தி சொல்லி சாப்பாடு நல்லா இருக்கும்னு சொன்னாங்க.. பொதுவாக எனக்கு government institutions மேல பெருசா நம்பிக்கையில்லாம தான் போய் பார்த்தேன்.. முதல் ஆச்சர்யம் buffet.. அடுத்த ஆச்சர்யம் சுவை.. அதற்கும் மேலே விலை.. சென்னையிலிருந்து வருபவர்களுக்கெல்லாம் அந்த விலையை கேட்டால் ஆச்சர்யமாக இருக்கும்... சாப்பாடும் சரி அந்த இடமும் சரி... அருமை.. அதே மனசோட சாமி கும்பிட்டுவிட்டு மதுரை செல்ல ரெடி ஆனோம்.. ராமர் பாதம், லட்சுமண தீர்த்தம்னு இன்னும்கூட ஒரு சில இடங்கள் இருக்கு... அதெல்லாம் அடுத்த முறை வரும்போது பார்த்துக்கொள்ளலாம்னு கிளம்பிட்டோம்....

அடுத்த பதிவுல தனுஷ்கோடி அனுபவங்களை பத்தி சொல்றேன்...


Tuesday 6 December 2016

பயணம் - இராமேஸ்வரம் & தனுஷ்கோடி 1

நம்ம எல்லாருக்கும் ஒவ்வொரு விசயத்துல ஆர்வம் இருக்கும்...அந்த விதத்துல எனக்கு மிகவும் விருப்பமானது பயணங்களே ...

தமிழகத்தினொரு கோடியில் இருக்கும் சரித்திர பிரசித்திபெற்ற ஊர்களான இராமேஸ்வரம் மற்றும் தனுஷ்கோடிக்கு சென்றிருந்தேன்... இந்த முறை எனது பயணம் மதுரையிலிருந்து தொடங்கியது.. மானாமதுரை, பரமக்குடி, ராமநாதபுரம் வழியாக கிட்டத்தட்ட 180கிமீ தூரம்.. இந்த ஊர் பெயர்களையெல்லாம் முன்னரே கேள்விப்பட்டிருந்தாலும் இது வரை சென்றதில்லை.. அதனால் ஒரு கூடுதல் ஆர்வத்துடன் பயணத்தை தொடங்கினோம்..


மதுரையை விட்டு காலை 6 மணிக்கெல்லாம் கிளம்பி விட்டதால் எங்குமே ட்ராபிக் தொந்தரவு இல்லை... சாலையும் நல்ல தரத்திலிருந்ததால் நல்ல வேகத்தில் செல்ல முடிந்தது.. கிட்டத்தட்ட 2 மணி நேரத்திலெல்லாம் ராமநாதபுரத்தை அடைவதற்கும் காலை உணவுக்கான நேரத்துக்கும் சரியாக இருந்தது... ஊருக்குள் வந்ததும் ஓரிருவரிடம் விசாரித்ததில் ஹோட்டல் ஐஸ்வர்யா நன்றாக இருக்கும் என்று சொன்னார்கள்... சரி, போய் பார்ப்போமே என்று போனால் நிஜமாகவே ஒரு ஆச்சர்யம் என்றால் மிகையாகாது... ஹோட்டல் உள்ளலங்காரங்களும் அந்த சூழலும் அருமை... எல்லா இடத்திலும் நான் கவனிக்கும் விஷயமான வாஷ்ரூமும் அவ்வளவு சுத்தமாக இருந்தது.. வழக்கமாக காலை நேரங்களில் ஆர்டர் செய்யும் தோசை, பொங்கல், பூரி போன்ற உணவுகளே ஆர்டர் செய்தோம்.. உணவுகள் உடனுக்குடன் வந்ததுடன் சுவையும் மிக அருமை... சாம்பார் மட்டும் காரம் கொஞ்சம் ஜாஸ்தி... குழந்தைகள் தான் ஆ ஊ என்றார்களே தவிர எங்களுக்கு பேஷ் பேஷ் தான்!!!


ஹோட்டல் அட்ரஸ் மற்றும் அருகிலுள்ள இடங்களை மேலே உள்ள படத்திலிருந்து எடுத்து கொள்ளுங்கள்.. B1 போலீஸ் ஸ்டேஷனுக்கு எதிரே உள்ளது என்று நினைக்குறேன்.. தேசிய நெடுஞ்சாலை என்பதால் காரை நிறுத்துவதிலும் பெரிய பிரச்னை இல்லை.. ஒரு நல்ல ஓய்வுக்கப்புறம் எங்கள் பயணத்தை தொடர்ந்தோம்..

ராமநாதபுரத்திலிருந்து 30-40 நிமிட பயணத்தில் நாம் பார்க்க வேண்டிய முக்கியமான இடம் வந்து விடுகிறது... அது தான் பாம்பன் பாலம்.. பாம்பன் பாலத்திற்கு ஈடு கொடுக்கும் வலிமைனு சங்கர் சிமெண்ட் அறிவிப்பு இருக்கானு தேடி தேடி பார்த்தேன்... ஒன்னும் காணும் 😜😜

அங்க ஒரு டோல் பூத் ஒன்னு வச்சு வசூலிக்குறாங்க... டோல் கட்டிட்டு உள்ள நுழைந்தால் பாம்பன் பாலம் நம்மை ஆச்சர்யப்படுத்துகிறது..போலீசார் வாகனங்களை ஒரு வரிசையில் நிறுத்தி இறங்கி சென்று அந்த இடத்தின் காட்சிகளை காண அனுமதிக்கிறார்கள்.. அந்த கடலின் நிறமும் அங்கே கிடைக்கும் காட்சிகளும் எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காதவை.. பாலத்தின் இரண்டு புறமும் கடலை பார்த்தவுடன் குழந்தைகளின் குதூகலத்துக்கு அளவே இல்லை... எத்தனையோ இணைய தளங்களில் பார்த்திருப்பேர்கள் என்றாலும் சில படங்கள் இங்கே..



படகுகளின் அணிவகுப்பு !!!


பாலத்தின் அடியில் செல்லும் சிறிய கப்பல்...


அலைகள் இல்லாத இராமேஸ்வர கடலும் அதன் நீல நிறமும் கொள்ளை அழகு... ஒரு வழியாக பாம்பன் பாலத்தை ரசித்து விட்டு இராமேஸ்வரம் தீவை நோக்கி பயணிக்க ஆரம்பித்தோம்.. அடுத்த பதிவுக்கு போகுமுன் டாப் வியூவில் பாம்பன் பாலம்...



Saturday 3 December 2016

நாடி ஜோதிடம் -நம்பலாமா?! - நிறைவு

கடந்த 3 பதிவுல எனக்கு தெரிஞ்ச அளவுக்கு நாடி ஜோதிடம் பற்றி விளக்கி இருக்கிறேன். இப்ப நான் எங்க பார்த்தேன்னு சொல்றேன்.. ஏன்னா நான் முன்னாடியே சொன்ன மாதிரி, போலிகள் தான் இதுல நிறைய இருக்காங்க...

நான் வைத்தீஸ்வரன் கோவில்ல பார்த்த இடம்: http://www.srisivanadi.com
அவங்க இணைய தளத்துலயே அவங்க முகவரி மற்றும் தொலைபேசி எண்கள் உள்ளன. நீங்கள் போவதாக இருந்தால் முன்னரே அப்பாயிண்ட்மெண்ட் வாங்கிட்டு போறது நேரத்தை மிச்சமாக்கும். கூகிள் மேப் screenshot மற்றும் coordinates கீழே:


சாப்பிடுவதற்கும் தங்குவதற்கும் 2 டீசெண்டான ஹோட்டல்கள் உள்ளன.
1) ஹோட்டல் அக்க்ஷர்தாம் 
2) ஹோட்டல் சதாபிஷேகம் 

அது போக நவகிரக கோவில்களில் ஒன்றான செவ்வாய்க்குறிய சிவன் கோவிலும் இங்குள்ளது. அதுனால 6 மணி நேரம் தாராளமாக இந்த ஊரில் பொழுது போக்கலாம். என்ன கொஞ்சம் காஸ்டலியான பொழுதுபோக்கு...

சென்னையில இருக்கீங்களா... வைத்தீஸ்வரன் கோவில் வரைக்கும் போக முடியாதா... கவலை வேண்டாம்... சென்னையிலும் ஒரு இடம் உள்ளது... அந்த இடத்தின் முகவரி மற்ற விவரங்கள் கீழே உள்ள screenshot ல்:



என்னோட family மற்றும் friends கிட்ட இருந்து வந்த opinions:

  • நம்ம பிறந்ததுல இருந்து இப்ப வரைக்கு உள்ள information தெளிவா சொல்றாங்க.. ஆனா எதிர் காலம் பத்தி சொல்றதுல பல விஷயங்கள் சரியாக இருந்தாலும், அவ்வளவு details இல்லை..  
  • சில நேரங்களில் நாடி ஜோதிடத்தை விட ஜோசியர்கள் ரொம்ப துல்லியமா கணிக்குறாங்க 
  • நம்மலா ஒரு விஷயத்துல கருத்து கேட்டா ஒருமாதிரி குத்து மதிப்பா தான் பதில் சொல்றாங்க 
  • சில நேரங்கள்ல அவங்க கணிப்புகள் தப்பாவும் இருக்கு

டிஸ்கி: இந்த நாடி ஜோதிடம் சம்பந்தமான பதிவுகளின் முதல் நோக்கம் அனுபவ பகிர்தலே.. இந்த ஜோதிடத்தில் சொன்னபடி நடக்குதோ இல்லையோ, அதை தெரிந்து கொள்வது ஒரு சுவாரசியமான அனுபவம். விருப்பமிருந்தால் அனுபவித்து பாருங்கள்.


Friday 25 November 2016

நாடி ஜோதிடம் -நம்பலாமா?! - 3

போன பதிவுல நம்மளோட மூல ஓலை எப்படி எடுக்குறதுனு பார்த்தோம்... எதிர்கால பலன்கள் தெரிஞ்சுக்கிறத பத்தி இந்த பதிவுல பார்ப்போம்.. முன்னாடியே சொன்ன மாதிரி மூல ஓலைக்கும் நம்மளோட பலன்களுக்கான ஓலைக்கும் ஏதோ link இருக்கு போல... அந்த link வச்சு நம்ம பலன்களை தேடி எடுக்குறாங்க.. இது கொஞ்சம் நேரம் எடுக்கிற வேலை தான்... சில நேரங்கள்ல ஓலை கிடைச்சதும் போன் பன்றேன்னு கூட சொல்லுவாங்க... ஆனா அது கொஞ்சம் அரிது தான்...

சரி, நம்ம ஓலையை கண்டு பிடிச்சுட்டாங்கனு வச்சிக்கோங்க... நம்ம மொத்த வாழ்க்கையோட விவரங்களும் செய்யுள் வடிவுல இருக்கும்... கொஞ்சம் கடினமான தமிழ்.நம்மளோட பொதுவான பலன்களை தெரிஞ்சுக்கிறத 'பொது காண்ட பலன்கள்' அப்படினு சொல்வாங்க... அது போக ஒரு 15 காண்டம் இருக்குனு நினைக்குறேன். அதுல ஒரு குறிப்பிட்ட அம்சம் பத்தி டீடைலா சொல்வாங்க... உதாரணத்துக்கு தொழில், திருமணம், தோஷம், பரிகாரம்னு ஒவ்வொரு அம்சத்துக்கும் இருக்கு... நமக்கு விருப்பம் இருந்தா கூடுதல் பணம் கட்டி தெரிஞ்சுக்கலாம். இதுல பரிகாரம் பத்தி பின்னால சொல்றேன்..

சரி, இப்ப பொது காண்டத்தை பாக்க போறோம்னு வச்சிக்குவோமே.. அதுலயும் ஒரு விஷயம் இருக்கு... நான் வைதீஸ்வரன் கோவில்ல பாத்த சென்டர்ல  பொது காண்டத்துலயே மேலோட்டமா சொல்றதும் இருக்கு, துல்லியமா இருக்குறதுக்கு இருக்குனு சொன்னாங்க... எந்த அளவுக்கு துல்லியம்னா, நம்ம சாகப்போற நாளை கூட தெரிஞ்சுக்கலாமாம்... ஆள விடுங்க சாமின்னு மேலோட்டமாவே தெரிஞ்சுகிட்டேன்...

இப்ப உங்க வயசு 30ன்னு வச்சுக்கிட்டா, இப்ப இருந்து ஒவ்வொரு 5 வருஷத்துக்கும் எப்படி இருக்கும்னு சொல்லுவாங்க.. உங்களோட 35 வயசு வரைக்கும் என்னென்ன நடக்கும்... 35-40 ல என்னென்ன நடக்கும் அப்டினு போய்கிட்டே இருக்கும்...பொதுவா ரொம்ப முக்கியமான விஷயங்களை மட்டும் குறிப்பா(specific) சொல்வாங்க.. உதாரணத்துக்கு எனக்கு கம்பெனி மாறுறது பத்தியும் குழந்தை பிறக்கிறது பத்தியும் சொன்னாங்க...

அதே நேரத்துல எதிர்மறையான பலன்களை முடிஞ்சா அளவுக்கு சொல்லாம தவிர்த்திர்றாங்க.. இல்ல அத ஒரு சின்ன விஷயம் மாதிரி தகவல்(Hint) குடுப்பாங்க... அந்த விஷயம் நடக்கும் போது தான் அதோட வீரியத்தை தெரிஞ்சுக்க முடியும் !!! நம்மளா வலுக்கட்டாயமா கேட்டா சொல்வாங்களானு தெரியல... தெரிஞ்சுக்கவும் வேண்டாமே...

உங்களோட மொத்த பலன்களையும் செய்யுள் வடிவுல நோட்டுல எழுதி குடுத்துருவாங்க... அதோட பலன்களை படிச்சு சொல்றத ஆடியோவா ரெக்கார்ட் பண்ணியும் குடுத்துருவாங்க... அவர் வாசிக்கும் போது உங்களுக்கு ஏதாவது டவுட் இருந்தா சைகை காமிச்சா ரெக்கார்டிங்கை நிப்பாட்டிட்டு பதில் சொல்வாங்க... இதுல என்னோட அபிப்ராயம் என்னனா, அவங்களா வாசிக்கறத மட்டும் தான் நம்பலாம்... நம்ம கேட்டு அவுங்க பதில் சொல்றதெல்லாம் பெரும்பாலும் வழக்கமான ஜாதக கணக்குகள் படி சொல்றது தான்..

என்னங்க இப்ப ஓரளவுக்கு தெளிவாகுதா இந்த பிராஸஸ்.. ஒரு சில பேர் என்ன எதுன்னு தெரிஞ்சுக்காமலே நாடி ஜோதிடம்னா ஃபிராடுன்னு சொல்வாங்க.. அதெல்லாம் நம்பாதீங்க... எல்லாம் தெரிஞ்ச ஏகாம்பரம் நம்ம ஊர்ல நிறையவே இருக்காங்க...

இதே மாதிரி தான் பரிகாரம்னு பேச்செடுத்தாலே ஃபிராடுன்னு சொல்வாங்க..  அதையும் டெஸ்ட் பண்ணி பாப்போமேன்னு பார்த்தேன். வழக்கம் போல குருதட்சணைன்னு சொல்லி கொஞ்சம் பணம் கொடுத்தால் நல்லதுன்னு சொல்வாங்க.. குடுக்கறதும் குடுக்காததும் நம்ம இஷ்டம் தான்.. நான் கொடுக்கலை.. அதுக்கப்புறம் நம்ம போக வேண்டிய கோவில்களை சொல்றாங்க. அங்க போய் அர்ச்சனை பண்ணுங்கன்னு சொல்றாங்க.. அவ்ளோ தான்... அந்த கோவில்களுக்கு போறதும் போகாததும் கூட நம்ம விருப்பமே.. ஒரு விதத்துல எனக்கு ஆச்சர்யமா கூட இருந்துச்சு... எனக்கு ஒரு 6 கோவில் சொன்னாங்க... அதுல 4 கோவில் என்னோட வீட்ல இருந்து 5km தூரத்துக்குள்ள தான் இருந்துச்சு... மீதி 2 கோவில் 60km தூரம் தான்...

என்னோட தனிப்பட்ட கருத்துனு கேட்டீங்கன்னா, குமுதா ஹாப்பி தான்... மகிழ்ச்சி...

Tuesday 22 November 2016

நாடி ஜோதிடம் -நம்பலாமா?! - 2

போன பதிவுல நாடி ஜோதிடத்துல முதல் ஸ்டெப் கைரேகை எடுப்பாங்கன்னு சொன்னேன்ல, அது என்னனு பாக்கலாம்.. நம்ம கைரேகைல இருக்குற கோடுகள் புள்ளிகளை வச்சு கைரேகையை பலவிதமா வகை படுத்தி வச்சிருக்காங்க... உதாரணத்துக்கு என்னோட கைரேகை பேரு மகுடமணி கீற்று ரேகைனு சொன்னாங்க. இதை மாதிரி எத்தனை ரேகை இருக்குனு தெரியல.. ஆனா இது தான் ஓலை சுவடி கண்டு பிடிக்கறதுல முதல் ஸ்டேப்.. இந்த ஒவ்வொரு வகையான ரேகைக்கு பொதுவா 3-5 ஓலை கட்டு இருக்கு... ஒவ்வொரு கட்டுலயும் தோராயமா ஒரு 50 ஓலைகள் இருக்கும்.. இந்த ஓலை கட்டுல இருந்து நம்மளோட ஓலையை கண்டு பிடிக்கறது அடுத்த ஸ்டெப்...

அது ஒரு iterative method... அதாவது ஒவ்வொரு ஓலைலயும் ஒருத்தர பத்தின குறிப்புகள் இருக்கும்... அது நமக்கு பொருந்துதுன்னா ஆமா சொல்லணும்.. இல்லைனா இல்லைனு சொல்லணும் 😏 ஆனா நீங்க வேற எந்த பதிலோ கூடுதல் தகவலோ தரத்தேவை இல்லை.. அவுங்க வாசிச்சு சொல்றதுல ஒரு குறிப்பு உங்களுக்கு மேட்ச் ஆகலைனா கூட அது உங்களுக்கான ஓலை இல்லை.. உதாரணத்துக்கு இப்படி வருதுன்னு வச்சுக்குவோம்...

வாசிப்பவர்: உங்க கூட பிறந்தது ரெண்டு பேரு
நீங்க : ஆமா
வாசிப்பவர்: ஒரு அண்ணன் மற்றும் ஒரு தங்கச்சி
நீங்க : ஆமா
வாசிப்பவர்: தங்கச்சிக்கு திருமணம் ஆகிருச்சு
நீங்க : இல்லை

இப்ப ஒரு குறிப்பு உங்களுக்கு பொருந்தாதனால ஓலையை வாசிக்கறவர் அடுத்த ஓலைக்கு போயிருவார்... இப்படியே ஒவ்வொரு ஓலையா வாசிச்சு தான் உங்களுக்கு உரிய ஓலையை கண்டு பிடிக்க  முடியும்.. என்னோட நண்பன் ஒருத்தனுக்கு, அப்பா அம்மாவோட பேரு கூட match ஆகிருச்சு... ஆனா மனைவி பேரு தப்பா இருந்துச்சு... அதுக்கு வாசிக்கறவர் சொன்னாராம், நீங்க ஒருவேளை இந்த பெயருடைய பெண்ண கல்யாணம் பண்ணி இருந்தீங்கன்னா உங்க வாழ்க்கை இப்ப இருக்கிற மாதிரி இல்லாம வேற மாதிரி கூட  இருந்திருக்கலாம்.... 12பி படம் பாக்குற மாதிரி இருக்குல்ல... அதுனால ஓலைல இருக்குற எல்லா குறிப்பும் பொருந்துனா தான் அது உங்களோட ஓலை... அது வரைக்கும் உங்களுக்கும் சரி, வாசிக்கறவர்க்கும் சரி பொறுமை கொஞ்சம் வேணும்...😊
இதுக்கு இன்னொரு உதாரணம் கொடுக்கறதுனா என்னோட cousin மனைவிக்கு ரெண்டு பெயர்... அதாவது வீட்டுல கூப்பிடுறது ஒன்னு... official பெயர் இன்னொன்று... ஓலைல ரெண்டு பெரும் அப்படியே இருந்துச்சு... அதே மாதிரி இன்னொன்னு சொல்லுவாங்க,.. ஓலைல பெயரெல்லாம் பூடகமா தான் இருக்கும்.. exact ஆ இருக்காதுன்னு... அதெல்லாம் நம்பவே நம்பாதீங்க...  பேரெல்லாம் அப்படியே முழுசா இருக்கும்... மிஞ்சி போனா வடமொழி எழுத்து தமிழ்ல இருக்கும்... இல்ல மெய்யெழுத்துல புள்ளி இல்லாம இருக்கும்.. ஆனா கண்டிப்பா உங்க பேரு , உங்க அப்பா & அம்மா பேரு, கல்யாணம் ஆகி இருந்தா மனைவி/கனவன் பேரு இருக்கும்... உங்களுக்கு தமிழ் வாசிக்க தெரியும்னா நீங்களே படிச்சு பாக்கலாம்.. த்ரில்லான அனுபவமா இருக்கும்.. குழந்தைங்களோட வயசு மற்றும் ஆனா பெண்ணானு சொல்வாங்க ஆனா பெயர் இருக்காது..
சில பேர் சொல்வாங்க..ஒவ்வொரு குறிப்பா வாசிக்கும் போது நாம சொல்ற பதிலை வச்சு கொஞ்சம் கொஞ்சமா நம்ம டீடெயில்ஸ் கலெக்ட் பண்ணி நம்மட்டயே திரும்ப சொல்லுவாங்கனு... அதெல்லாம் கிடையவே கிடையாது... நானோ என்னோட நண்பர்களோ அந்த மாதிரி feel பண்ணல... ஒருவேளை ஏமாத்து பேர்வழிகள்ட்ட மாட்டிருந்தோம்னா அப்படி நடந்திருக்கலாம்...

எனக்கெல்லாம் இப்படி தான் ஓலை ஆரம்பிச்சது... உங்களுக்கு இரண்டு சகோதரர்கள்.. ஒருவர் அரசாங்க உத்தியோகத்துல இருக்கார்.. இன்னொருத்தர் பிரைவேட்ல வேலை பாக்குறார்.. நீங்க பிங்கள வருடத்துல பிறந்திருப்பீங்க.. அப்படியே போயி எல்லா டீடைலும் பக்காவா மேட்ச் ஆச்சு... அதாவது சொந்த வீடு இருக்கு, வெளி நாடு போயிட்டு வந்திருப்பீங்கங்குற அளவுக்கு proof இருக்கு ஓலைல..

so , எல்லா குறிப்புகளும் match ஆகி உங்க ஓலையை கண்டு பிடிச்சுடீங்களா.. அது தான் உங்க ஓலைங்கறதுக்கு சாட்சியா தான் அந்த குறிப்புகளை சொல்லி இருப்பாங்க.. இந்த ஓலையை வச்சு தான் உங்களோட எதிர்கால பலன்கள் உள்ள ஓலையை கண்டு பிடிச்சு அதை ஒரு நோட்டுல எழுதிட்டு வருவாங்க.. அது அடுத்த ஸ்டெப்..

அதை பத்தி அடுத்த பதிவுல பேசலாமா ?!!

Sunday 20 November 2016

நாடி ஜோதிடம் -நம்பலாமா?! - 1

நம்மல்ல பெரும்பாலோருக்கு எதிர் காலத்தை பத்தி தெரிஞ்சுக்கிற ஆர்வம் இருக்கும்... ஆர்வம் இல்லாட்டி அவங்கள தெய்வ பிறவினு தான் சொல்லணும்.. இன்னைலருந்து 10 வருசத்துல நீ அம்பானி மாதிரி ஆயிருவனு யாரவது சொன்ன சந்தோசமா தான இருக்கும்..ஒவ்வொரு பெயர்ச்சியின் போதும், அது குருவோ சனியோ இல்ல ராகு கேதுவோ நமக்கு என்ன நடக்கும்னு தெரிஞ்சுக்குறதுல அலாதி ஆர்வம்.. அதும் இப்பலாம் ஒவ்வொரு ராசிக்கும் மார்க்கெல்லாம் போட ஆரம்பிச்சுட்டாங்க... நமக்கு நல்ல காலம் வருதோ இல்லையோ, ஜோதிட ரத்னாக்களுக்கு நல்ல வாழ்வுதான் இப்பலாம்...
சரி, இதெல்லாம் உண்மையா...? நம்பலாமா.. ? ஆயிரம் வருசத்துக்கும் மேல இந்தியா உட்பட உலகின் பல நாடுகள்ல பல விதங்கள்ல இந்த ஜோதிடம் சார்ந்த நம்பிக்கைகள் இருந்துட்டு தான் வந்திருக்கு..  அதுல ஒன்னு தான் நாடி ஜோதிடம்.. அது சம்பந்தமான என்னோட எண்ணங்களை உங்களோட பகிர்ந்துக்க தான் இந்த பதிவு.
இந்த நாடி ஜோதிடத்தோட அடிப்படை நம்பிக்கை என்னனா, இந்த உலகத்துல பிறக்கப்போற ஒவ்வொரு மனிதனோட வாழ்க்கையும் முன்னரே விதிக்கப்பட்டது.. Yes..we all are living a predefined life.. எனக்கு இந்த கான்செப்ட்ட நம்பாம இருக்க முடியல.நான் இதை ஒரு சில தடவை feel பண்ணி இருக்கேன்.. நீங்க கூட நிதானமா யோசிச்சு பாருங்க..
நாடி ஜோதிடத்துல என்ன சொல்றாங்கன்னா, நம்ம எல்லோரோட வாழ்க்கையும் எப்படி இருக்குங்கிறத முன்னாடியே கணிக்கப்பட்டு சித்தர்களால் ஓலை சுவடிகளில் எழுதி வைக்கப்பட்டுள்ளது. நமக்கு தெரிந்து கொள்ள வேண்டிய நேரம் வரும்போது நாமே நாடி சென்று தெரிந்து கொள்ளலாம்.. இந்த அம்சம் தான் நாடி ஜோதிடத்தை மற்ற முறைகளில் இருந்து வேறுபடுத்துகிறது. பெரும்பாலான மக்களுக்கு அறிமுகமான திருக்கணித/வாக்கிய பஞ்சாங்க ஜோதிடமானது நாம பிறக்கும் பொது கோள்கள் இருந்த நிலையையும் இப்ப உள்ள கோள்களின் கோச்சார நிலையையும் கருத்தில் கொண்டு பல கணக்குகளின் அடிப்படையில் நமது எதிர்காலத்தை கணிப்பது.. இந்த முறையில் நம் எதிர் காலத்தை தெரிந்து கொள்வது முழுக்க முழுக்க ஜோதிடரின் திறமையில் தான் இருக்கிறது...இதற்கு முதலில் உண்மையான ஜோதிடரை கண்டு பிடிக்க வேண்டும்... உங்களுக்கே தெரியும் இப்பலாம் உண்மைய விட போலி தான் எல்லாத்துலயும் அதிகம்... அதன் பின் அந்த ஜோதிடரின் அனுபவ அறிவும் ரொம்ப முக்கியம்...அதற்கும் மேலே அதிர்ஷ்டமும் வேண்டும்.. ஏனென்றால் ஒவ்வொரு பலனையும் துல்லியமாக தெரிய வேண்டும் என்றால் ஏகப்பட்ட permutation & combinations உள்ளன. ஆனால் நாடி ஜோதிடத்தில் இவை எல்லாம் துல்லியமாக கணக்கிடப்பட்டு முழு வாழ்க்கையும் இப்படித்தான் இருக்குமென்று எழுதி வைக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த ஒரு காரணத்தினால் தான் நாடி ஜோதிடம் மற்ற முறைகளை விட நம்பகமானது என எனக்கு தோணுகிறது.
பொதுவாக இந்த ஓலை சுவடிகளெல்லாம் வெவ்வேறு கால கட்டங்களில் வெவ்வேறு சித்தர்களால் எழுதப்பட்டதாக நம்ப படுகிறது...பின் இவை அந்த சித்தர்களின் சீடர்கள் மற்றும் குடும்பங்களால் வழி வழியாக பாதுகாக்கப்பட்டு வந்துள்ளன..காலப்போக்கில் பல ஓலைகள் அழிந்தும் போயிருக்கலாம்.. எஞ்சி உள்ளவை இன்னும் சில குடும்பங்களால் பாதுகாக்கப்பட்டு வருகின்றன...அவர்கள் தான் இந்த தொழிலை இப்போதும் செய்து வருகின்றனர்.. பொதுவாக இவர்கள் அனைவரும் சிதம்பரத்துக்கு அருகில் உள்ள வைத்தீஸ்வரன் கோவிலில் தான் வாழ்ந்து வந்துள்ளனர்... இப்போது இந்த தொழிலில் உள்ள லாபத்தை பார்த்து சிறிது சிறிதாக மற்ற ஊர்களுக்கும் இடம் பெயர்ந்துள்ளார்கள்.. அந்த விதத்தில் எனக்கு தெரிஞ்சு காஞ்சிபுரம் மற்றும் சென்னையில் நம்பகமான சிலர் உள்ளனர். இந்த தொழில் தேவைக்காகவும் பாதுகாப்பிற்காகவும் இந்த ஓலைகள் பல முறை நகல் எடுக்க பட்டிருக்கின்றன. அதனால் இந்த ஓலைகள் பார்வைக்கு புதியதாகவும் இருக்கலாம். நமது எதிர்கால பலன்களை தெரிந்து கொள்வதற்கு இவர்களில் யாரவது ஒருவரை நாம் அணுக வேண்டும்.  அது ஒரு தனி மனிதராக இருக்கலாம் அல்லது ஒரு அமைப்பாக இருக்கலாம்.
சரி... இப்ப இந்த நாடி ஜோதிடம் எப்படி தெரிஞ்சுக்கிறதுனு பார்க்கலாம்.. எங்க தெரிஞ்சுக்கிறதுங்கிறத கடைசில சொல்றேன்.. நீங்க நாடி ஜோதிட நிலையத்தை அணுகுறீங்கன்னு வச்சுக்குவோம்.. அவங்க உங்ககிட்ட இருந்து உங்க பெருவிரல் கைரேகையை எடுத்துக்குவாங்க... ஆண்களுக்கு வலது கை மற்றும் பெண்களுக்கு இடது கைனு நினைக்குறேன். உங்க ரேகையை அடையாளம் வச்சுக்கிறதுக்காக உங்க ஊரு பேரை கேட்பாங்க. நீங்க பிறந்த ஊரை சொல்லணும்னு அவசியம் இல்லை.. இது வெறும் அடையாளத்துக்கு மட்டும் தான்.
இப்ப உங்க கைரேகையை வச்சு உங்களுக்கான ஓலையை கண்டு பிடிக்கணும். ஒவ்வொருத்தருக்கும் ஒரு மூல(main) ஓலை மற்றும் விரிவான பலன்களுடலான ஓலை இருக்கும். முதலில் உங்களின் மூல ஓலையை கண்டு பிடிக்க வேண்டும். அது கொஞ்சம் நேரம் எடுக்கும்.. எப்படினு அடுத்த பதிவுல பார்ப்போமே.. :)

பயணம் - தாராசுரம்

ஏற்கனவே என்னுடைய திருவிசநல்லூர் பயண அனுபவத்தை பகிர்ந்திருந்தேன்... அங்கிருந்து நான் சென்ற இடம் கும்பகோணத்திற்கு மிக அருகில் உள்ள தாராசுரம்.... தூரம் என்று பார்த்தால் வெறும் 15km தான்.. ஆனால் டிராபிக்,oneway காரணமாக கொஞ்சம் லேட்டா ஆகலாம்..அதிகபட்சம் 45 நிமிஷம் ஆகலாம் அவ்வளவு தான்..
darasuram_map2
கோவிலை ஒட்டியே கார் பார்க்கிங் மற்றும் டாய்லெட் வசதிகள் உள்ளன.இந்த கோவில்  UNESCO World Heritage Site கீழ் வர்றதுனால அடிப்படை வசதிகள் நன்றாகவே உள்ளது. மேலும் அதிக விவரங்களுக்கு wiki page.
dara2
கோவில் உள்ளே வந்து விட்டால் நிறைய திறந்த வெளியும் சிற்பங்களும் உங்களை சோழர் காலத்தை பற்றி கண்டிப்பாக சிந்திக்க வைக்கும்...குதிரைகளால் இழுக்கப்படும் ரத வடிவிலான மண்டபம் இந்த கோவிலின் சிறப்பு...இன்னொரு நல்ல விஷயம், கூட்டம் அதிகம் இல்லாததால் நிதானமாக ரசிக்கலாம்..
dara1



தஞ்சை கோவிலும் சரி இந்த கோவிலும் சரி பக்தியை விட கலை ரசனைக்கு தான் நிறைய விஷயங்கள் உள்ளன.. அர்ச்சகர்களும் நன்கு பழகுகிறார்கள். லிங்கத்துக்கு மிக அருகில் சென்று வழிபடவும் அனுமதிக்கிறார்கள்...
dara3
கோவிலுக்கு வெளியே பெரிய புல்வெளியும் செடிகளும் குடும்பத்துடன் உட்கார்ந்து பொழுதை போக்க நல்ல இடம்.. அருகிலேயே பட்டு நெசவு செய்யும் குடும்பத்தினர் வீடுகளும் உள்ளது..பிடித்திருந்தால் நேரடியாக அவர்களிடமே பட்டு புடவைகளும் வாங்கலாம் ...






மற்றபடி கங்கை கொண்ட சோழபுரம் கோவிலை பற்றி நம்மில் நிறைய பேருக்கு தெரிந்திருக்கும். அதுவும் கலை ரசனைக்கும் பொழுது போக்குக்குமான கோவிலே.. அதுவும் சென்னையிலிருந்து கும்பகோணம் வரும் வழியில் தான் உள்ளது.. அந்த கோவிலை பற்றிய நிறைய தகவலைகள் இணையத்தில் போதுமான அளவு உள்ளது..
இன்னொரு இனிய விஷயம்... பொன்னியின் செல்வன் மற்றும் உடையார்  நாவலில் வரும் பல பாத்திரங்களின் பெயர்களில் உள்ள ஊர்களை இந்த பயணத்தில் நீங்கள் பார்க்கலாம்.
நான் இது வரை கும்பகோணத்தில் தங்கியதே இல்லை.. பெரும்பாலும் திருக்கடையூரில் தான் தங்குவேன். அதனால் கும்பகோணத்தில் உள்ள தங்குமிடங்கள் பற்றி எனக்கு ஐடியா இல்லை. ஆனால் நிறைய Homestay options இணையத்தில் உள்ளன.
கமர்சியலாக்கப்பட்ட கோவில்களை விட இந்த மாதிரி கோவில்கள் நல்ல அனுபவத்தை தருகின்றன.. முடிந்தால் ஒரு முறை சென்று வாருங்கள் ... 

பயணம் - திருவிசாநல்லூர்

நண்பர்களே... எனக்கு பிடித்த இரண்டு கோவில்களை பற்றி உங்களிடம் பகிர்ந்து கொள்ளலாம் என்று நினைத்தேன்...இரண்டுமே கும்பகோணத்திற்கு மிக அருகில் உள்ளன..
  1. தாராசுரம் ஐராவதேஸ்வர் கோவில்
  2. திருவிசாநல்லூர் சிவயோகிநாதர் கோவில்
சென்னையிலிருந்து 350km தொலைவிற்குள் இருப்பதால் வார இறுதியில் சென்று வர ஏற்ற இடம். காரில் செல்ல ஒரு 6 மணி நேரம் ஆகும்.
darasuram_map
சென்னையில் இருந்து ரெகுலராக travel பண்றவுங்களுக்கு தெரியும் செங்கல்பட்டு டோல்கேட்டை தாண்டுவது எவ்வளவு முக்கியம்னு.. காலை 6 மணிக்கு முன்னால் அதை தாண்டிவிட்டால் பயண நேரம் வெகுவாக குறையும். உங்கள் பயணத்தை பிளான் பண்ணும் போது இதை மனதில் வைத்து கொள்ளவும்.
அடுத்த முக்கியமான விஷயம் காலை உணவு.இதை 2 விதமா பிளான் பண்ணலாம். ஒன்னு நம்மளே சாப்பாடு செஞ்சு எடுத்துட்டு போகிறது... இல்ல வழியில் நல்ல ஹோட்டல்ல சாப்பிடுகிறது.. இது ரெண்டுக்குமே பொருத்தமான இடம் மதுராந்தகத்தை தாண்டியதும் இருக்கு...
99 காபி - இந்த கடைல கார பார்க் பண்ண நல்ல இட வசதி இருக்கு.. அதோட நீங்க கொண்டு வந்த சாப்பாட்டை சாப்பிடவும் வசதியா டேபிள், சேர் இருக்கு. காபி, வடை,தண்ணி போன்றவற்றை அவங்க கடைல வாங்கிக்கலாம். ரொம்ப ரொம்ப முக்கியமா சுத்தமான டாய்லெட் வசதியும் இருக்கு..
99km
ஹோட்டல் ஹரிதம் -நல்ல டேஸ்ட், நல்ல வசதி
haritham
நல்லா சாப்டாச்சா.. ரிலாக்ஸ் பண்ணியாச்சா... கிளம்ப வேண்டியது தான்.. எனக்கு தெரிஞ்சு ஒரே ரூட்டு விக்கிரவாண்டி டோல் தாண்டி லெஃப்ட்ல எடுத்து நெய்வேலி வழியா போக வேண்டியது தான்... நீங்க நெய்வேலியை நெருங்குறப்ப அடுத்த பிரேக்குக்கான நேரம் வந்திருக்கும்... நான் பெரும்பாலும் என்னோட பெற்றோர் மற்றும் குழந்தைகளோட போறதுனால 3 மணி நேரத்துக்கு ஒரு பிரேக் கண்டிப்பா எடுக்குற மாதிரி வந்துரும்.. நெய்வேலி ஆர்ச்சுக்கு முன்னாடியே ஹோட்டல் அர்ச்சனா கார்டன்ஸ் இருக்கு... இதுவும் ரொம்ப டீசெண்டான ஹோட்டல்.. கொஞ்சம் expensive. நல்ல இடம்... நல்ல ரிலாக்ஸ் பண்ணிட்டு பயணத்தை தொடரலாம்...
இந்த பயணத்துலயே உள்ள ஒரே ஒரு மோசமான விஷயம்னா அது ரோடு கண்டிஷன் தான். விக்கிரவாண்டில திரும்பினதுல இருந்து அணைக்கரை தாண்டுற வரைக்கும் ரோடு ரொம்ப மோசம்..பல வருஷமாவே இப்படி தான் இருக்கு.. அங்கங்க கொஞ்சம் patch work நடக்குது அவ்ளோ தான்.. இதெல்லாம் பார்த்தா என்ஜாய் பண்ண முடியுமா...
தொடர்ந்து போனோம்னா கொள்ளிடம் ஆற்றை கடந்ததும் ஒரு ரைட் எடுத்து உள்ள போனா திருவிசாநல்லூர் வரும்... உள்ள போறது ஒரு 2km தூரம் தான்... ஆனால் முழுவதும் பச்சை பசேல்னு வயலும் தென்னை மரமுமாக அட்டகாசமான இடம்... அதும் மழை காலத்துக்கு அப்புறம் போனீங்கன்னா கண்கொள்ளா காட்சியாய் இருக்கும்.வயலுக்கு நடுவுல கோவில் ரொம்ப அற்புதமா இருக்கும்..
img_20150411_110704
சின்ன கோவில் தான் ஆனால் மறக்க முடியாத அனுபவமாக இருக்கும்.கோவில் உள்ள நுழைந்ததும் ஒரு அழகிய பெரிய மகிழ மரம் இருக்கும். அதன் போட்டோ என்னிடம் இல்லை.. உங்களுக்கு ஒரு நல்ல surprise ஆக இருக்கும்..கும்பகோணம் சென்றால் மறக்காமல் சென்று வாருங்கள்.
img_20150411_105331
பின் குறிப்பு:
  1. இந்த கோவில் சமீபத்தில் புதுப்பிக்க பட்டிருக்கலாம்...கூகிளில் இன்னும்  இந்த கோவிலின் பழைய படங்கள் தான் உள்ளன. ஏமாற வேண்டாம்.
  2. இது ரிஷப ராசிக்குரிய கோவில். மேலும் விவரங்களுக்கு கூகிளாண்டவரை கேட்கவும்.
  3. இதற்கு மிக அருகில் நடந்து செல்லும் தொலைவில் கடக ராசிக்குரிய கோவிலான கற்கடேஸ்வரர் கோவிலும் உள்ளது.
  4. GPS coordinates - 79.420907,11.006861. இதை பயன்படுத்துவது பற்றி அறிய எனது இந்தியாவில் GPS பதிவை பார்க்கவும்.