Saturday 3 December 2016

நாடி ஜோதிடம் -நம்பலாமா?! - நிறைவு

கடந்த 3 பதிவுல எனக்கு தெரிஞ்ச அளவுக்கு நாடி ஜோதிடம் பற்றி விளக்கி இருக்கிறேன். இப்ப நான் எங்க பார்த்தேன்னு சொல்றேன்.. ஏன்னா நான் முன்னாடியே சொன்ன மாதிரி, போலிகள் தான் இதுல நிறைய இருக்காங்க...

நான் வைத்தீஸ்வரன் கோவில்ல பார்த்த இடம்: http://www.srisivanadi.com
அவங்க இணைய தளத்துலயே அவங்க முகவரி மற்றும் தொலைபேசி எண்கள் உள்ளன. நீங்கள் போவதாக இருந்தால் முன்னரே அப்பாயிண்ட்மெண்ட் வாங்கிட்டு போறது நேரத்தை மிச்சமாக்கும். கூகிள் மேப் screenshot மற்றும் coordinates கீழே:


சாப்பிடுவதற்கும் தங்குவதற்கும் 2 டீசெண்டான ஹோட்டல்கள் உள்ளன.
1) ஹோட்டல் அக்க்ஷர்தாம் 
2) ஹோட்டல் சதாபிஷேகம் 

அது போக நவகிரக கோவில்களில் ஒன்றான செவ்வாய்க்குறிய சிவன் கோவிலும் இங்குள்ளது. அதுனால 6 மணி நேரம் தாராளமாக இந்த ஊரில் பொழுது போக்கலாம். என்ன கொஞ்சம் காஸ்டலியான பொழுதுபோக்கு...

சென்னையில இருக்கீங்களா... வைத்தீஸ்வரன் கோவில் வரைக்கும் போக முடியாதா... கவலை வேண்டாம்... சென்னையிலும் ஒரு இடம் உள்ளது... அந்த இடத்தின் முகவரி மற்ற விவரங்கள் கீழே உள்ள screenshot ல்:



என்னோட family மற்றும் friends கிட்ட இருந்து வந்த opinions:

  • நம்ம பிறந்ததுல இருந்து இப்ப வரைக்கு உள்ள information தெளிவா சொல்றாங்க.. ஆனா எதிர் காலம் பத்தி சொல்றதுல பல விஷயங்கள் சரியாக இருந்தாலும், அவ்வளவு details இல்லை..  
  • சில நேரங்களில் நாடி ஜோதிடத்தை விட ஜோசியர்கள் ரொம்ப துல்லியமா கணிக்குறாங்க 
  • நம்மலா ஒரு விஷயத்துல கருத்து கேட்டா ஒருமாதிரி குத்து மதிப்பா தான் பதில் சொல்றாங்க 
  • சில நேரங்கள்ல அவங்க கணிப்புகள் தப்பாவும் இருக்கு

டிஸ்கி: இந்த நாடி ஜோதிடம் சம்பந்தமான பதிவுகளின் முதல் நோக்கம் அனுபவ பகிர்தலே.. இந்த ஜோதிடத்தில் சொன்னபடி நடக்குதோ இல்லையோ, அதை தெரிந்து கொள்வது ஒரு சுவாரசியமான அனுபவம். விருப்பமிருந்தால் அனுபவித்து பாருங்கள்.


No comments:

Post a Comment